Monday, February 20, 2017

5. ஆழ்ந்த மனசாட்சி

“நல்ல புத்தகங்கள்,நல்ல நண்பர்கள்,ஆழ்ந்த மனசாட்சி-இதுவே சிறந்த வாழ்க்கை”

முதலில் சொன்ன நல்ல இரண்டு புரிகிறது. ஆனால் அது என்ன ஆழ்ந்த மனசாட்சி ? இந்த கேள்வி எல்லாருக்கும் எழுகிறது.
It’s hard to define it. But I can share my thoughts on it and would love to hear from others as well.

நல்லது,கெட்டது என்று பகுத்தறிந்து மனசாட்சிப் படி ஒரு முடிவை எடுப்பது, என்று எடுத்துக்கொண்டால். நல்லது எது, கெட்டது எது என்று நாம் கேட்டதை,படித்ததை,நாம் அறிவுறப்படுத்தப் பட்டதை வைத்து முடிவு எடுப்பது. ஒன்றை refer செய்து (mey be subconsciously) முடிவு எடுப்பது or தெளிவடைவது. இது முதல் நிலை என்று கொள்ளுவோம். பிறகு ஒரு வயதிற்கு மேல், அல்லது ஒருநிலைக்கு மேலான முதிர்ச்சியை நாம் அடைந்த பிறகு. நமக்குள் நாமே சில ஐடியாக்களை வரக் காண்கிறோம் கொள்கிறோம். Sometimes, we say that, it is my principle to do or NOT to do certain things..etc. The “Principle” mentioned here is formed by way of ideology that we get/ for ourselves in the next stage and to some extent is evolutionary. Whether such ideologies are perfect or ரெண்டுங்கெட்டானா என்பதெல்லாம் தனி Topic.

இப்படியே மேலும் மேலும் முதிர்ந்து சென்றால் வருவது தான் ஆழ்ந்த மன சாட்சி.
It happens through spiritual maturity got out of intense Saadhanaa. To an extent we can compare this to a stage where you are guided by intuition. (Don’t take that being guided by intuition alone is ஆழ்ந்த மனசாட்சி)

In some cases, ஆழ்ந்த மனசாட்சி என்பது தர்ம சங்கடமான விஷயங்களில் ஒவ்வொன்றுக்கான மூல காரணத்தை மனதில் ஸ்புரிக்கச் செய்கிறது, which in turn arms you with the ability to view situations compassionately in relation to its cause, so that you make only the right decision.
ஆழ்ந்த மனசாட்சி என்பது முடிவு எடுக்க உதவுவது மட்டுமல்ல, தர்ம சங்கடங்களை யூகித்துத் தடுத்து நிறுத்தும் ஆற்றலையும் கொடுக்கிறது
So, ஆழ்ந்த மனசாட்சி can be described in one word as ஆன்ம பலம்.
மனசாட்சி என்பது பல நிலைகளின் (stages) பாற்பட்டது. ஒவ்வொரு நிலையிலிருந்தும் முன்னேறிப் பெறும் முதிர்ந்த நிலை தான் ஆழ்ந்த மனசாட்சி.
மனசாட்சி என்பதை Conciousness என்று கொண்டு சிந்திக்குங்கால் மேலும் தெளிவு பிறக்கும்.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் சவிதர்க்க சமாதி மற்றும் நிர்விதர்க்க  சமாதி இரண்டும் இதைப் போன்ற satges of consciousness தான். இதைக் கொண்டு தான் நான் மேற்கண்டவாறு Interpret செய்கிறேன்.

சவிதர்க்க  சமாதி
பெயர்/வார்த்தை, அதன் பொருள் , உருவம் ,பொருளைப் பற்றிய அறிவோ (knowledge based on Logic) அல்லது ஊகமோ (Imagination – Deduction) இருக்கும் சமாதி நிலை சவிதர்க சமாதி ஆகும்.
இந்த நிலையிலும் மேல் கூறியவை இருக்கும் வரையில் (இருப்பதாலே ) மயக்கத்துக்கு இடமுண்டு.
அலையிலாச் சமாதியே எனினுமுண்டு மீதியே
பெயருமன்றி  பொருளதன்றி  உருவின்பதிவும் தேவையே
பெயரில்பெயரின் பொருளில்பொருளின் அறிவில்இல்லை தூய்மையே
மயக்கமிந்த மூன்றினாலும் விளையக்கூடலாகுமே..!   
  
நிர்விதர்க்க சமாதி
பெயர், பொருளின் ஞானம் (ஊகத்தின் அன்றி தர்க்கத்தின் பாற்பட்டதான) நினைவுப் பதிவின் துணை இல்லாமல் பொருள் விளக்கம் தோன்றுகின்ற சமாதி நிலையே நிர்விதர்க்க சமாதி. (தர்க்கம் = logic ).
நிர்விதர்க்கம் என்பது நினைவின் பதிவுஅற்றது
நின்றவந்த பதிவிலாகும் மயக்கம் தன்னை வென்றது
கற்பிக்கவோர் துணையிலாது தானேஅறியப் பெற்றது

சொற்பதத்தில்  அடங்கிடாத உண்மையிங்கே  மின்னுது ..!
__________________

No comments:

Post a Comment