Monday, March 6, 2017

15. உன் நினைப்பில் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)








உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில்-பதித்தேன்
(2)
இடர்-வர உனை-நாடி நான் பெறும்-இதம் பெறும்-கோடி
உன்-மகன் தலை-கோதி நீ தரும்-இதம் பெறும்-கோடி
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
சோற்றை உண்ணும்-வேளை அங்கே உன்-கை வந்தது
சோற்றை உண்ணும்-வேளை அம்மா உன்-கை வந்தது
போதும் என்ற-போதும் வாயில்-அதுவே தந்தது 
இன்னும் கொஞ்சம்-கண்ணே என்று-அன்பைப் பெய்தது
உனக்கெது இணை கூறேன்  நீ அன்பினில் பல-ஆறே
நினைத்தால் ஏக்கம் எழுதே  ஆ.. படுத்தால் தூக்கம் கெடுதே  
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை- எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
 பிள்ளை தூங்கும் நேரம் உந்தன் எண்ணம் வந்தது
சோகம் பந்து-போலும் வந்து-நெஞ்சில் நின்றது
இனி-உந்தன் பரிவேது என்ற-ஏக்கத்தின் முடிவேது
இரவும் பகலும் உனையே ஆ.. நினைத்தால் முடிவும் இலையே
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை- எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
வாடல் கொண்டு-பிள்ளை இங்கே தனியே-நின்றது
வாடா எந்தன்-கண்ணே என்ற குரலைத் தேடுது
நானழு..தழுதாச்சு என் கண்களும் காய்ஞ்சாச்சு
விரைவினில் வருவேன் அங்கே..ஆ..அதுவரை இருப்பாய் அன்பே
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-என்றும் நெஞ்சில் பதித்தேன்
உறவினில் பலகோடி அவை உன்-மடி முன்-தூசி
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில்-பதித்தேன்
இடர்-வர உனை-நாடி நான் பெறும்-இதம் பெறும்-கோடி
உன்-மகன் தலை-கோதி நீ தரும்-இதம் பெறும்-கோட
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-என்றும் நெஞ்சில் பதித்தேன்



No comments:

Post a Comment